அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, October 25, 2009

எந்த ஊரு என்றாலும் நம்மூரு போலாகுமே!

பால் தாக்கரே (என்னும் ஒரு பெரியவர்) நேற்று தன்னுடைய பத்திரிகையான "சாம்னா"வில் இப்படி புலம்பி இருப்பதாக இன்றைய பேப்பரில் படித்தேன்.

"மராத்தியர்கள் சொரணை கெட்டவர்கள். அவர்கள் நலனுக்காக எவ்வளவோ செய்தேன். இருந்தாலும் அவர்கள் என் முதுகில் குத்தி விட்டார்கள். இப்படி இருந்தால் மகாராஷ்டிரா முன்னேறவே முன்னேறாது."

இந்த புலம்பலில் மராத்தியர்கள் என்பதை தமிழர்கள் என்றும் மகாராஷ்டிரா என்பதை தமிழ்நாடு என்றும் மாற்றி படித்தால் இதே போல் பல முறை, நம்மூரு 'தல' புலம்புவது என் நினைவுக்கு வருகிறது.

உங்களுக்கு?

நீதி : நல்லவர் என்பவர் யார்? நமக்கு (மட்டுமே) நல்லது செய்பவர்.

0 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):