1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பெயர் சொல்ல விருப்பமில்லை (அட அதுதாங்க பதிவுலகத்தில் என் பெயர்!)
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர் இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக பெயர் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அப்படி வைத்தேன். முதலில் சொல்ல விருப்பமில்லை என்றுதான் பெயர் வைத்திருந்தேன். ஆனால் "சொல்ல விருப்பமில்லை said" என்று வந்தால் லாஜிக் ஒத்து வரவில்லை, எனவே பெயர் சொல்ல விருப்பமில்லை என்று வைத்து விட்டேன்.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
அது ஒரு அருமையான இரவு. இந்த இரவிலே திடீரென்று ஒரு தேவதை வானில் தோன்றி என் முன்னே வந்து தமிழ்ப் பதிவுலகில் என் சேவை மிகவும் தேவை என்று கூறி..................
என்றெல்லாம் சொன்னால் நம்புவீர்கள், இருந்தாலும் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. 2005 முதல் பலருடைய பதிவுகளையும் படித்து comments மட்டும் போட்டு வந்த நான் திடீரென்று 2009 தீபாவளி அன்று என் முதல் பதிவை எழுதினேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
என்னுடைய ஆதர்சன வலைப் பதிவு இட்லிவடை தான். அதில் வரும் பதிவுகளை எல்லாம் படித்த நான், என் பதிவுகளும் எல்லோரையும் எட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டதென்னவோ நிஜம்தான். ஆனால் நான் பிரபலம் அடைவதற்கு என்று தனியாக எதுவும் செய்ய வில்லை. என் மனத்தில் தோன்றிய எழுத்துகளை என் பதிவில் எழுதினேன். ஆனால் பிறருடைய பதிவுகளை நிறையப் படித்து அங்கங்கே எனக்குத் தோன்றிய கமெண்ட்ஸ் எழுதினேன். கொஞ்சம் வித்தியாசமான பெயர் என்பதாலோ என்னவோ, என் வலைப்பூ ஓரளவு புதிய ஆதரவாளர்களைச் சம்பாதித்தது. தமிளிஷ்ல என் பதிவுகளை இணைத்ததன் மூலமும் ஓரளவு பிரபலம்(?!) ஆகியிருக்கேன் 5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
"இது பொழுது போக்கும் பதிவு அல்ல, நம் நாட்டின் பழுது போக்கும் பதிவு" என்றெல்லாம் கப்சா விட நான் தயாரில்லை. அதே நேரத்தில் சம்பாதிப்பதற்காகவும் தான் எழுதுகிறேன். அதாவது, மக்களின் மனங்களை சம்பாதிப்பதற்காக.........(மனசைத் தொட்டுட்டேனா?
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் கமென்ட் போட்டவர் எடக்குமடக்கு கோபி தான். மற்றபடி என்னைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததால் யாரும் தானாக என்னைப் பாராட்ட வில்லை, ஆனால், நானாகத் தொடர்பு கொண்ட சில பதிவர்கள் இன்றும் என் ரெகுலர் followers லிஸ்டில் இருக்கிறார்கள். குறிப்பாக கோகுலத்தில் சூரியன் வெங்கட் என் எழுத்துகளை விமரிசிக்கும் விதமே தனி. அவை என் எழுத்துகளை ஓரளவு சீர் செய்ய உதவியிருக்கின்றன.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என் பதிவு டைட்டில் கூறுவதுபோல், நான் எப்போதும் பட்டதைச் சொல்பவன், பட்டென்று சொல்பவன். என் எழுத்துகள் என் சிந்தனையில் தோன்றும் விஷயங்களே தவிர யாரையும் மனம் நோகச் செய்வது என் எண்ணம் அல்ல. முழுக்க, முழுக்க, நகைச்சுவைக்காகவும், பொழுது போக்குவதற்காகவும் மட்டுமே நான் பதிவுலகை பயன்படுத்துகிறேன், பயன் படுத்துவேன். இன்னும் படுத்துவேன்(?!)
இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் :
(என்னை ரெண்டு பேரும் வெவ்வேறு தொடர்களில் மாட்டிவிட்டதால் அவர்களை அழைக்கிறேன்!)