அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, April 11, 2011

வாரச் சந்தை - 11.04.11

தத்துவம் 

எல்லா ஆண்களும் முட்டாள்கள் இல்லை. சில பிரம்மச்சாரிகளும் இருக்கிறார்கள்.

பொன்மொழி 

அறிவுரை கூற எல்லோருக்கும் உரிமை உண்டு; அதை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மட்டுமே உரிமை இல்லை.

ஜோக் 

மனைவி கணவனிடம் : ஏங்க, நீங்க கண்ணாடியைக் கழட்டிட்டா, இருபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ, அப்படி எனக்குத் தெரியுது.

கணவன் : எனக்கும் அப்படிதான், இந்தக் கண்ணாடியைக் கழட்டிட்டா இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ, அப்படி எனக்குத் தெரியுது! 

குவிஸ் 

மனைவிக்கும் மேனேஜருக்கும் என்ன வித்தியாசம்?

ரிடையர் ஆனப்புறம் மேனேஜரோட தொந்தரவு இருக்காது.

கவிதை

(கொஞ்சம் இங்கிலீஷ் கலந்திருக்கு, பொறுத்தருள்க!)

G-க்குப் பிறகு H  
என்பது உண்மைதான்
காந்திக்குப் பிறகு
ஹசாரேயைக் கண்டபின்!
H-க்குப் பின் I 
என்பதும் உண்மைதான்
ஹசாரேக்குப் பின் 
இந்தியாவே திரண்டபோது!  

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

Good ones... :-)))

CS. Mohan Kumar said...

//எல்லா ஆண்களும் முட்டாள்கள் இல்லை. சில பிரம்மச்சாரிகளும் இருக்கிறார்கள்.//

உங்க மனைவியை பார்க்க நேர்ந்தால் இதை சொல்லணும்

Madhavan Srinivasagopalan said...

கவிதை செம..

Madhavan Srinivasagopalan said...

/ @ Blogger மோகன் குமார் who said..."உங்க மனைவியை பார்க்க நேர்ந்தால் இதை சொல்லணும்" //

இந்த வருஷமும் மே ரெண்டாம் தேதி மன்னை வந்தீகன்னா அண்ணியாரிடம் சொல்லலாமே ?

Speed Master said...

அருமை

middleclassmadhavi said...

கடைசி கவிதையை தவிர வாரச் சந்தைல ஒரே பொருளா இருக்கே!
:-))

வெங்கட் said...

// மனைவிக்கும் மேனேஜருக்கும் என்ன
வித்தியாசம்? //

மேனேஜர் திட்டுவாரு., ஆனா அடிக்க மாட்டாரு..!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அறிவுரை கூற எல்லோருக்கும் உரிமை உண்டு; அதை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மட்டுமே உரிமை இல்லை.

true and super

R.Gopi said...

//எல்லா ஆண்களும் முட்டாள்கள் இல்லை. சில பிரம்மச்சாரிகளும் இருக்கிறார்கள்.//

//கணவன் : எனக்கும் அப்படிதான், இந்தக் கண்ணாடியைக் கழட்டிட்டா இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ, அப்படி எனக்குத் தெரியுது! //

தலைவா...வீட்டுல நீங்க எழுதறத படிக்கலேன்னா இப்படியெல்லாம் எழுதுவீங்களா?