அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, September 18, 2012

2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ?

என்னோட இந்தப் பதிவுல நான் கிண்டலடிசேன்  ஆனா இப்போ பயமா இருக்கு 2012-ல் உலகம் அழியும்னு சொன்னது சரிதானோ? என்னடா இப்படி கேக்கறேன்னு யோசிக்கிறீங்களா?


பின்ன என்ன சார்? ஒரு கொடுமையை தாங்கிக்கவே மனசுல தைரியம் கிலோ கணக்குல வேணும் ஆனா ரெண்டு கொடுமையை அதுவும் அடுத்தடுத்து வந்தா, ஆண்டவன் மேல பாரத்தை போட வேண்டியதுதான்.

டைட்டில பார்த்துட்டு வந்தா இவரு இப்படி பில்டப் கொடுத்துகிட்டே போறாரே தவிர விஷயத்துக்கு வரவே இல்லையேன்னு மண்டையைப் பிச்சுக்காதீங்க  இன்னிக்கு தெரியாத்தனமா ஆபீஸ்லேர்ந்து சீக்கிரமே வந்தது தப்பு, கரண்ட் இருக்கேன்னு டிவியைப் பார்த்தது அதை விட தப்பு. என்னன்னா நாளைக்கு சன்டிவியில மதியம் "சுறா" மாலை "மூணு" படம் போடறாங்க  (காலையிலேயே சந்திரமுகி போடறாங்க, ஆனா பிராயச்சித்தம்  தப்பு பண்ணினப்புறம் தானே பண்ணனும் முன்னாடியே பண்ற  பிராயச்சித்தத்துக்கு பலன் இருக்காதே!)

அதுனால எனக்கு என்ன தோணுதுன்னா "அது நம்மகிட்ட தான் வந்துகிட்டிருக்கு எல்லாரும் ஒடுங்க!"

டிஸ்கி 1: விளம்பரத்துல என்ன வேடிக்கைன்னா மதியம் சுறா படம்னு சொன்னப்புறம் தனுஷ் வந்து "ஒய் திஸ் கொலைவெறி"ன்னு பாடறது நல்ல "டைமிங்".

டிஸ்கி 2 : ஆனா மாலை "மூணு"ன்னு சொன்னப்புறம் அதே சாங்கை விஜய் பாடறதா நினைச்சுப் பார்த்தேன்.

டிஸ்கி 3 : இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு, கரண்ட் இருந்தாதானே படம் பார்க்கறதை பத்தி யோசிக்கணும் "அம்மா வாழ்க"ன்னு அட்வான்சா சொல்லி வச்சுக்கறேன் 

Monday, September 10, 2012

புதிர்கள் (விடைகள்) & Hunt for Hint an Advertisement


சென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே:
1. என்னிடம் இரண்டு காசுகள் (coins)  இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?

விடை : இன்னொரு காயின் வெளிநாட்டு காசு எனவே ரூபாய் என்று பார்த்தல் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது 
2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?

விடை : எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவரை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பிடித்தவர் போலீஸ் எனவே முன்னவர் மட்டுமே குற்றவாளி 

3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?

விடை : அந்த இன்னொரு காயின் தான் ஐந்து ரூபாய். இந்த காயின் இரண்டு ரூபாய்.மொத்தம் ஏழு ரூபாய்.  (நோ.....நோ....பேட் வேர்ட்ஸ்,ப்ளீஸ்) 

விடைகள் அப்பாதுரை   சொல்லிவிட்டார்  வாழ்த்துகள்!

ஓகே ஆக உங்க மூளையை தட்டிவிட்டாச்சு  புதன் கிழமை மாலை எங்களுடைய www.terrorkummi.com பெருமையுடன் வழங்கும் Hunt for Hint போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்

Sunday, September 9, 2012

புதிர்கள் (அறிவாளிகளுக்கு மட்டும்)


1. என்னிடம் இரண்டு காசுகள் (coins)  இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?


2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?

3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?


விடைகள் நாளை மாலை! விடைகள் மட்டறுத்தப் படும்.